Sunday, September 7, 2008

http://muelangovan.blogspot.காம்


புலவர் செ.இராசு அவர்கள்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் யான் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் அறிஞர்கள் பலர் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தனர். அவர்களுள் எளிய தோற்றத்துடன் ஒருவர் மிகச் சிறந்த கல்வெட்டுச் செய்திகளை அவைக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.தமக்குத் தொடகத்தில் பேச இயலாத தன்மை இருந்ததாகவும் பின்னர் பேசிப்பேசி அக்குறை நீங்கிவிட்டதாகவும் குறிப்பிட்ட அந்த அறிஞரின் பேச்சு இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே உள்ளது.

ஆம்.அவ்வாறு பேசியவர் நம் மதிப்பிற்குரிய புலவர் செ.இராசு அவர்களேயாவர்.பிறகு அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுரைகளைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தாலும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமையாமல் போனது.அண்மைக் காலமாக எமக்கு வாய்த்த உயரிய நட்புக்கு உரிய முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா) அவர்கள் வழியாகப் புலவரின் பன்முகச் சிறப்புகளையும் உள்ளம் உவக்கும்படி கேட்டு அவர்களுடன் நட்பு கொள்ளத் தொடங்கினேன்.

தமிழுக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வரலாறு இணையத்தில் பார்வைக்குக் கிடைக்காத சூழலில் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இயன்ற வகையில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவன் யான் என்பதால் புலவர் செ.இராசு அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இணையத்தில் அறிய விழைவார்க்குப் பயன்படும் வகையில் பதிவு செய்கிறேன்.விரிவான வரலாறு அறிய விழைவாருக்கு உதவும் வகையில் அவர்களின் முகவரியும் தருகிறேன்.தக்கவர்கள் தக்காங்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புலவர் செ.இராசு அவர்கள் 02.01.1938 இல் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு(பெருந்துறை வட்டம்,ஈரோடு மாவட்டம்)என்னும் ஊரில் பிறந்தவர்.பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள்.இவர்தம் மனைவியார் பெயர் கெளரி அம்மாள்.மூன்று ஆண்மக்கள் இவருக்கு வாய்த்தனர்.கணிப்பொறித் துறையில் இவர்கள் பணிபுரிகின்றனர்.

தொடக்கக் கல்வியை(1-5) திருப்பூர் கருவம்பாளையம்,தண்ணீர்ப்பந்தல்,வள்ளுவர் தொடக்கப்பள்ளி,ஞானிபாளையம்,இலண்டன் மிசன் பள்ளி(ஈரோடு)செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர்(1955-59).சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட்,முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி(1959),1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.

இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர்,கல்வெட்டியல் கலைச்செம்மல்,திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.

இவர் மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை(4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர்.

1959 இல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு,ஓலைப் பட்டயம்,ஓலைச்சுவடி,இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் சுவடிப்பயிற்சி,பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப் பயிற்சி,தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா.நாகசாமியிடம் தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டார்.

இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி ,பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர்.கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர்.இவ்வகையில் இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன.செய்திகள் 100 மேல் வந்துள்ளன.

பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும்,பின்னர் தலைவராகவும் செயல்பட்டவர். ஆவணம் என்ற இதழ் கொண்டுவரக் காரணமானவர்.பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிபவர்.ஆசிரியப்பணி புரிந்த பொழுது மாணவர்களை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டியவர்.

பல கல்லூரிகளில் இவரின் முயற்சியால் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.இவர்தம் கண்டுபிடிப்புகளுள் பல இவரின் பெருமையை என்றும் நினைவுகூரும்.அவற்றுள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக்கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்.இந்தியாவில் இதுவே முதலாவது இசைக் கல்வெட்டாகும்.

சங்க காலத்தில் கொடுமணம்(இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து அகழாய்வு செய்து உரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பணியாகும்.தென்னிந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல் கண்டறிந்தமையும் குறிப்பிடத் தகுந்த பணியேயாகும்.

சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து அறிவித்த இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.சென்னையிலிருந்து பூனா செல்லவிருந்த தஞ்சை மராட்டியர்களின் மோடி(மோடி என்பது மராட்டிய மொழியின் சுருக்கெழுத்தாகும்) ஆவணங்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்த முயற்சியும் இவருடையது ஆகும்.

தமிழ் ப்பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவருடைய நூல் வெளியிடப்பட்டது.ஆய்வாளர்கள் நிகழ்கால வரலாற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணகி கோட்டம்,கச்சத்தீவு உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.இவர் தம் உழைப்பில் கொங்கு,சுவடி,ஆவணம்,தேனோலை,கொங்குமலர் உள்ளிட்ட இதழ்கள் பொலிவு பெற்றன.

புலவர் செ.இராசு அவர்கள் பதிப்பித்த சுவடிப் பதிப்புகள்.

1.கொங்கு மண்டல சதகம் 1963
2.மேழி விளக்கம் 1970
3.மல்லைக் கோவை 1971
4.பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978
5.கொடுமணல் இலக்கியங்கள் 1981
6.பூந்துறைப் புராணம் 1990
7.மரபாளர் உற்பத்திக்கும்மி 1995
8.மங்கலவாழ்த்து 1995
9.ஏரெழுபது 1995
10.திருக்கை வழக்கம் 1995
11.கம்பர் வாழி 1995
12.ஞானமாலை 1997
13.புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997
14.கல்வியொழுக்கம் 1998
15.திங்களூர் நொண்டி1998(இணையாசிரியர்)
16.நீதியொழுக்கம் 2002
17.பஞ்சக்கும்மிகள் 5 (அச்சில்)

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்

1.தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 1983
2.தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் 1987
3.கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 1991
4.சேதுபதி செப்பேடுகள் 1994
5.சோழமண்டல சதகம் 1994
6.கல்வெட்டியலும் வரலாறும் 2001
7.தொண்டைமான் செப்பேடுகள் 2004

வட்டார,ஊர் வரலாற்று நூல்கள் :

1.எங்கள் பவானி 1967
2.தங்கம்மன் திருக்கோயில் வரலாறு 1981
3.வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு 1987
4.முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு 1989
5.நாகம்பள்ளி காணியாளர் வரலாறு 1989
6.அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர் வரலாறு 1990
7.பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு 1990
8.தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு 1990
9.கொடுமணல் வரலாறு 1991
10.ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு 1993
11.கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு 1993
12.நசியனூர்க் காணியாளர் வரலாறு 1994
13.நசியனூர்க் கண்ணகுல வரலாறு 1994
15.சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு 1994
16.காடையூர் முழுக்காதுகுல வரலாறு 1994
17.எழுமாத்தூர்ப் பனங்காடர்குல வரலாறு 1995
18.கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு 1995
19.காங்கயம் அகத்தீசுவரர் கோயில் வரலாறு 1995
20.ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு 1997
21.கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு 1997
22.ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு 1997
22.திண்டல்மலை வரலாறு 1997
23.அத்திப்பாளையம் செம்பூத்தகுல வரலாறு 1998
24.கொத்தனூர்க் குழாயகுல வரலாறு 1998
25.கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு 1998
26.பொன் ஆரியூர் வரலாறு 1998
26.கொங்கூர் வெண்டுவகுல வரலாறு 1999
27.குமரமங்கலம் தூரகுல வரலாறு 1999
28.நல்லூர் வரலாறு 2000
29.நீலம்பூர் வரலாறு 2000
30.புத்தரச்சல் குழாயகுல வரலாறு 2000
31.சிவன்மலை வரலாறு 2000
32.முத்தூர் வரலாறு 2001
33.அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு 2001
34.கொங்கலம்மன் கோயில் வரலாறு 2001
35.ஆயப்பரப்பு வரலாறு 2001
36.பிடாரியூர் வரலாறு 2001
38.நல்லூர் பனங்காடர்குல வரலாறு 2001
39.கிழாம்பாடி கண்ணகுல வரலாறு 2001
40.கொல்லன்கோயில் வரலாறு 2002
41.தாராபுரம் வரலாறு 2004
42.வள்ளியறச்சல் வரலாறு 2005
43.கோலாரம் வரலாறு 2005
44.கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு 2005
45.மேல் ஒரத்தை வரலாறு 2005
46.மறவபாளையம் வரலாறு 2005
47.வரலாற்றில் அறச்சலூர் 2006
48.பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு 2006
49.வெள்ளோடு காணியாளர் வரலாறு 2007
50பொங்கலூர் பொன்னகுல வரலாறு 2007
51.ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு 2008
52.தோளூர் காணியாளர் வரலாறு 2008

பிற குறிப்பிடத் தகுந்த நூல்கள்


1.கொங்கு குல மகளிர் 2008
2.ஈரோடு மாவட்ட வரலாறு 2008
3.காளிங்கராயன் கால்வாய் 2007
4.ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி - 1) 2007
5.கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும் 2007
6.கொங்கு வேளாளர் செப்பேடு, பட்டயங்கள் 2007
7.தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் 2007
8.கொங்கு நாடும் சமணமும் 2005
9.வெண்டுவண் குல வரலாறு 2005
10.தொண்டைமான் செப்பேடுகள் 2004
11.உ.வே.சா பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும் 2003
12.கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு 2003
13.காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு 2002
14.திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள் 1999
15.ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு 1998
16.கொத்தனூர்க் காணியாளர், குழாயர்குல வரலாறு 1998
17.வரலாற்றுக் கலம்பகம் 1998
18.விதரி அத்திப்பாளையம் செம்பூத்த குல வரலாறு 1998
19.ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில் காணியாளர்கள் வரலாறு 1997
20.ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு 1997
21.கச்சத் தீவு 1997
22.கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு 1994
23.நெஞ்சை அள்ளும் தஞ்சை 1994
24.பூந்துறைப் புராணம் 1994
25.செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு 1985
26.கலைமகள் கலைக்கூடக் கையேடு 1984
27.கலைமகள் கலைக்கூடம் 1981
28.நன்னூல் உரை 1980
29.கண்ணகி கோட்டம் 1976
30.திருமந்திரம் 100 1967
31.சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு 1959

புலவர் பெருமகனாரின் முகவரி :

புலவர் செ.இராசு அவர்கள்,
64 / 5 டி.பி.ஜி.காம்பளக்சு
புதிய ஆசிரயர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு -638 011

பேசி : 0424 -2262664
செல்பேசி : 99942 77711

நன்றி :
தி இந்து நாளிதழ்(படம்)
தூரிகா வெங்கடேசு
நா.கணேசன்(ஊசுடன்,அமெரிக்கா)
விருபா
கா.சா.சு.செந்தமிழ்க்கல்லூரி,திருப்பனந்தாள்

பூம்புகாரில் வரலாற்றுப் புதையல்-தினமணி

பூமிக்குள் புதையல் கிடைக்கலாம். ஆனால் ஒரு மாநகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது.

*பாடிய பட்டினப்பாலை இருக்கிறது. பாடப்பட்ட பட்டினம் கடலுக்குள் பாலையாய்க் கிடக்கிறது.*

புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும்கூட.

தமிழ் வளர்ச்சித் துறை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைப்
பட்டியலிட்டு, அவை தற்போது எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கின்றன
என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்த *"ஊரும் சீரும்"* எனும் திட்டத்தைச்
செயல்படுத்தி வருகிறது.
ஊரும் சீரும் திட்டத்தில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது பூம்புகார். பூம்புகாரை ஆவணப்படமாக்கும் திட்டச் செயற்பாட்டின் போதுதான் (இப்பணியில் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் திரு.சந்துரு, இயக்குநர் திரு.சீனிவாசன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்) பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது.

பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி*முதுமக்கள் தாழி - *இறந்தவர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து பூமிக்குள் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய சால் ஆகும். *புறநானூறு "கலம் செய்கோவே"* *என்று முதுமக்கள் தாழி பற்றிய குறிப்பைத் தருகிறது*.

தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார்
நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.

- செம்பியன்,
- மனுநீதி சோழன்,
- கரிகாலன்,
- கிள்ளிவளவன்

காலங்களில் பூம்புகார் துறைமுகத் தலைநகராக இருந்திருக்கிறது. பத்துப்பாட்டில் ஒன்றாகிய பட்டினப்பாலை இவ்வூரைப்பற்றி பாடுகிறது.

- மகதம்,
- அவந்தி,
- மராட்டா நாட்டுக்

கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது.
இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப்

- படகுத்துறை,
- புத்தர்விகாரை,
- உறைகிணறுகள்,
- அரிய மணிகள்,
- கட்டடங்கள்,
- காசுகள்

ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.

தமிழக முதல்வர் வழங்கிய ஆதரவைக்கொண்டு ஏற்கெனவே கோவா ஆழ்கடல் அகழாய்வு மையம் பூம்புகாரில் நடத்திய ஆய்வில் கடலுக்குள்ளிருக்கும் கறுப்பு,சிவப்புப் பானை ஓடுகள் கட்டடப் பகுதிகள், நகர்ப் பகுதிகளைக் கண்டறிந்துள்ளது. ஆனால் தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, தனிச் சிறப்பிற்கு உரியதாகும்.

பெரிய தாழியில் பத்துக்கும் மேற்ப்பட்ட சிறுசிறு கலயங்கள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்த முதுமக்கள் தாழிகளைவிடப் பெரிய அளவிலும் உடையாத கலயங்களும் தற்போது கிடைத்துள்ளன.

கறுப்பு சிவப்பு கலயத்தில் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம்
இதுதான். குறியீடுகளோடு பூம்புகாரில் இதுவரை கறுப்பு சிவப்புக் கலயம் ஏதும்
கிடைக்கவில்லை. இதில் கழுத்துப் பகுதியில் கோட்டிற்குமேலே பாய்மரப் படகும்
மீனும் பொறிப்புகளாக உள்ளன. இது 21 செ.மீ உயரமும் 10 செ.மீ. வாய்ப்பகுதி
அகலமும் கொண்டுள்ளது.

பூம்புகாருக்கு அருகில் வானகிரி கோசக்குளத்தில்,1997-98-ல் எழுத்து
பொறிக்கப்பட்டிருந்த பானை ஓடு கிடைத்துள்ளது. ஆனால் அதில் என்ன
எழுதப்பட்டிருக்கிறது என்பதை இன்றுவரை ஆய்வாளர்கள் ஏற்கும் வகையில்
உறுதிப்படுத்த முடியவில்லை. செம்பியன் கண்டியூர் அய்யனார் கோயிலில்
கிடைத்துள்ள கறுப்புநிற பானையின் கழுத்துப் பகுதியில் இரண்டு
அம்புக்குறியீடுகள் மட்டும் உள்ளன. இதே ஊரில் கிடைத்த கல்கத்தி அல்லது
கல்கோடாரியில் சிந்துவெளிக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல்கத்தியின்
காலம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என்று தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள ஆதாரம் பலவகைகளில் குறிப்பிடத்தக்கது. கறுப்பு சிவப்பு நிறம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது.
கறுப்பு சிவப்பு நிறப்பானை சமதரையில் கிடைக்காமல் முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியின் காலம் பெருங்கற்காலம். *பெருங்கற்காலம் கி.மு.1000-லிருந்து கி.மு.3000 வரையிலான காலத்தைச் சேர்ந்தது.* மேலும் உறை கிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. *பட்டினப்பாலை, "உறைகிணற்றுப் புறசேரி" (வரி 27)யைப் பற்றி குறிப்பிடுகிறது.*

கிணறுகள் பலவகை.

- கடலுக்கு அருகில் அமைக்கப்பட்ட கிணறு ஆழிக்கிணறு;
- ஒழுங்கமைவு இல்லாத கிணறு கூவம்;
- ஆற்றுமணலில் தோண்டுவது தொடுகிணறு;
- ஏரியின் நடுவில் உள்ள கிணறு பிள்ளைக் கிணறு;
- பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சத் தோண்டிய கிணறு பூட்டைக் கிணறு.

இவ்வரிசையில் மேலும் ஒரு கிணறு உறை கிணறு.

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. *கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.*

கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. *பூம்புகாரின் கடற்கரையில் விழா நடைபெற்றபோது மக்கள் கூடியிருந்த செய்தியை உறைகிணறு உறுதிப்படுத்துகிறது. * குறியீடுகளோடு கறுப்பு சிவப்பு நிறக் கலயம் முதுமக்கள் தாழியிலிருந்து
கிடைத்திருப்பதும் கடற்கரையில் விழாக் காலங்களில் மக்களின் தாகத்தைத் தீர்த்த உறைகிணறு வெளிப்பட்டிருப்பதும் வரலாற்றாய்விற்கும் தமிழியல் ஆய்விற்கும் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடும்.

நன்றி: தினமணி -
படியுங்கள் http://www.varalaaru.com/

சங்ககாலத்தில் பௌத்த, சமண, ஆசீவக மதங்களால் மறுப்புக்குள்ளான வைதீக சமயங்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிய காலமும், பல்லவ மன்னர்கள் முதலாம் மகேந்திரவர்மரும் இராஜசிம்மரும் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகளில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த விழைந்த காலமும் ஒன்றாக இருந்தது இவ்வைதீக மதங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம் என்று சொல்லலாம். வைதீக எதிர்ப்பு மதங்கள் ஆசையை ஒழித்தல், புலால் உண்ணாமை போன்ற வாழ்வியல் ஒழுக்கங்களை வகுத்து மக்களைக் கவர்ந்த நிலையில், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என்று பிளவுற்றிருந்த வைதீக சமயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எதிர்ப்பு மதங்களில் மக்களின் ஆதரவு பெற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் தன்னுள் வலிந்து வருவித்துக்கொண்டது. விலங்குகளைப் பலியிட்டு இரத்தத்தைக் கடவுளுக்குப் படைக்கும் வழக்கம், பூசணிக்காயை வெட்டிக் குங்குமத்தைத் தடவுவதாக மாறியது.

முதலாம் மகேந்திரவர்மர் எழுதிய மத்தவிலாச அங்கதம் மற்றும் பகவதஜ்ஜுகம் என்ற நகைச்சுவை நாடகங்கள், பௌத்தத் துறவிகள் எத்தகைய லௌகீக வாழ்வு வாழ்ந்தனர் என்பதை விளக்குகிறது. எதிர்ப்பு மதங்கள் சுகபோக வாழ்வைத் தடைசெய்யாத நிலையில், வைதீக சமயங்கள் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் விதித்துக்கொண்டு தனிப்பட்டுப் போக நேரிட்டது. பின்னர் மறுமலர்ச்சி பெறுவதற்காக, வைதீக மதங்களிலும் இல்லற வாழ்வுக்கு முக்கியத்துவம் உண்டு என்று வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடவுள்களுக்குள் உறவுமுறைகள் உருவாக்கப்பட்டன. இதை மக்களிடையே பரப்பப் பக்தி இலக்கியங்கள் இயற்றப்பட்டன. இராஜசிம்மர் காலத்தில் இதற்கும் ஒருபடி மேலேபோய், சோமாஸ்கந்தர் என்ற புதிய கடவுட்தொகுதி உருவாக்கப்பட்டு, அவர்காலக் கோயில்களில் கருவறையின் பின்சுவர்கள் இச்சிற்பத்தால் நிரப்பப்பட்டன. பின்னர் வந்த சோழர், பாண்டியர் ஆட்சிகளில் இவ்விலக்கியங்களில் கூறப்பட்ட நிகழ்வுகளுக்குச் சிற்பவடிவம் தரப்பட்டது. எனவே, சமணக்குகைகளைக் கைப்பற்றிப் புதிய குடைவரைகளை உருவாக்கினார்கள் என்று கூறமுடியாது. தமிழகம் முழுவதும் காணப்படும் தொடங்கிய பணிகள் நிறைவுறாமல், பல்வேறு கட்டங்களில் நின்று போயிருக்கும் ஏராளமான குடைவரைகளே இதற்குச் சான்று.

இதுபோல் சமணத்தை வெல்ல எழுந்த தென்தமிழ்நாட்டிலிருக்கும் குடைவரைகளைப் பற்றிய தொகுப்புதான் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2.





நூல் விபரம்

தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 1

ஆசிரியர்கள் : முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் மு.நளினி

விலை : ரூ. 100

பதிப்பகம் : சேகர் பதிப்பகம்








மதுரை மாவட்டக் குடைவரைகள் (தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 2)

ஆசிரியர்கள் : முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் மு.நளினி

விலை : ரூ. 150

பதிப்பகம் : டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்

இவ்விரு நூல்களும் கிடைக்குமிடங்கள் :

டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்,
C-87, 10வது குறுக்கு,
தில்லை நகர் மேற்கு,
திருச்சிராப்பள்ளி - 18.
தொலைப்பேசி : 91-431-2766581

பூங்கொடி பதிப்பகம்
14, சித்திரைக்குளம்,
மேற்கு வீதி,
மயிலாப்பூர்,
சென்னை - 4.
தொலைப்பேசி : 91-44-24643074

நியு புக் லாண்ட்,
526, வடக்கு உஸ்மான் சாலை,
தியாகராயநகர்,
சென்னை - 17.
தொலைப்பேசி 91-44-28158171

பாரி நிலையம்,
90, பிராடுவே,
சென்னை - 108,
தொலைப்பேசி 91-44-25270795




திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டால், தமிழ்நாட்டை வட, மைய மற்றும் தென் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடதமிழ்நாட்டிலிருக்கும் பல்லவர் குடைவரைகளையும், மைய நாட்டிலிருக்கும் முத்தரையர் குடைவரைகளையும் விரிவான அளவில் ஆய்வு செய்த இந்நூலாசிரியர்கள், தென்தமிழ்நாட்டிலிருக்கும் பாண்டியர் குடைவரைகளையும் ஆராய்ந்து முடித்துவிட்டால், தமிழ்நாட்டுக் குடைவரைகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வு முழுமையடையும் என்று எண்ணி, தாம் கண்டறிந்த ஆய்வு முடிவுகளைக் கட்டுரைகளாக்கி, அதன் பயனைத் தமிழ் கூறும் நல்லுலகம் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்நூல்களை வெளியிட்டுள்ளனர். நிறையப் பாண்டியர் குடைவரைகளை ஆராய்ந்திருந்தாலும் கீழ்க்கண்ட 11 குடைவரைகளின் ஆய்வை மட்டுமே நூலாக வெளிக்கொணர்ந்துள்ளனர். மீதமுள்ள குடைவரைகள் கூடிய விரைவில் நூலாக்கம் பெறும். இந்த நூலாக்கங்களுக்கு உதவிய ஒன்றிரண்டு பயணங்களில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பையும் மதுரை மாவட்டக் குடைவரைகள் நூலை 1000 ரூபாய்த் திட்டத்தின்மூலம் வெளியிடும் பேற்றையும் எங்கள் குழு பெற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. குன்றக்குடிக் குடைவரைகள்
2. பிரான்மலைக் குடைவரை
3. திருக்கோளக்குடிக் குடைவரை
4. அரளிப்பட்டிக் குடைவரை
5. அரிட்டாபட்டிக் குடைவரை
6. மாங்குளம் குடைவரை
7. குன்றத்தூர் குடைவரை
8. கந்தன் குடைவரை
9. யானைமலை நரசிங்கர் குடைவரை
10. தென்பரங்குன்றம் குடைவரை
11. வடபரங்குன்றம் குடைவரை

முதல் நான்கு குடைவரைகளும் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி திருமடத்தின் நிர்வாகத்தின்கீழ் வருவதால் அவற்றை ஒரு நூலாகவும், அடுத்த ஏழு குடைவரைகள் மதுரை மாநகரைச் சுற்றி அமைந்திருப்பதால் மதுரை மாவட்டக் குடைவரைகள் என்ற பெயரில் ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு நூல்களிலும் தனித்தனியாக ஒப்பீடுகள். தொகுதி 1-ல் முதல் நான்கு குடைவரைகளும் தொகுதி 2-ல் அனைத்துக் குடைவரைகளும் ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பீட்டில் கீழே தரப்பட்டுள்ள வரிகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

"கட்டமைப்பு, சிற்ப இருப்பு இவ்விரண்டிலும் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் ஒன்றோடு ஒன்று சில நிலைகளில் வேறுபட்டும் பல நிலைகளில் ஒன்றுபட்டும் அமைந்துள்ளன. தொடர்பிழைகளைக் காணமுடியும் அதே நேரத்தில் தனித்துவங்களையும் அடையாளப்படுத்த முடிகிறது. தோன்றிய இடம், காலம், சூழ வாழ்ந்த சமுதாயம், அதன் சமயக் களம், நிலவிய வரலாற்றுப் பின்னணி இவற்றின் அடிப்படையில் இக்குடைவரைகளை ஆராய்வது அவசியமாகிறது. அப்போதுதான் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயிற்கலையின் பொருளார்ந்த பின்புலத்தைத் தெளிய அறியமுடியும். அதற்கு இக்குடைவரைகள் அனைத்தையும் ஒருசேரப் பார்க்கும் வாய்ப்புத் தேவைப்படுகிறது."

அதாவது, ஓர் ஆய்வு என்றால், அந்த ஒரு கோயிலை அல்லது ஒரு குடைவரையை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதனுடன் தொடர்புடைய அனைத்துக் குடைவரைகளையும் விட்டுவிடாமல் ஆராய்வதே முழுமையான ஆய்வாகும். எனவேதான், இவை தொடர் நூல்கள் என்பதால், இந்நூலாசிரியர்களின் 'அத்யந்தகாமம்', 'வலஞ்சுழி வாணர்' போன்ற நூல்களுடன் ஒப்பிடுகையில் இவ்விரண்டு நூல்களும் முழுமையடையாமல் உள்ளன என்று கூறலாம். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் என்ற விரிவான தலைப்பை எடுத்துக்கொண்டதால், ஒவ்வொரு தொகுதியாக ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வரவில்லை. அப்படி வரவும் கூடாது. முதல் தொகுதி ஒப்பீட்டைக் காட்டிலும் இரண்டாம் தொகுதி ஒப்பீடு சற்று விரிவாக இருக்கிறது. பாண்டியர் குடைவரைகளைப் பற்றி நான் படிக்கும் முதல்நூல் என்பதால், இந்த ஒப்பீட்டுப் பகுதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தொகுதி 1-ல் நான்கரைப் பக்கங்களை மட்டும் கண்டதும் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதை வாசித்துவிட்டுப் பிறகு யோசித்துப் பார்த்த போதுதான், எளிமையான நான்கே நான்கு குடைவரைகளில் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து இதற்குமேல் ஒப்பாய்வு செய்ய இயலாது என்றும், இத்தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வருவது யானை பார்த்த குருடர் கதையாகத்தான் முடியும் என்பதும் புரிந்தது.

இந்நூலாசிரியர்களுடன் நாங்கள் செல்லும் பயணங்களின்போது கற்றுக்கொள்ளும் ஆய்வு நுணுக்கங்களை நூலாக்கம் பெற்றபின்பு வாசித்துப் பார்க்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி அருகிலுள்ள செவல்பட்டி குடைவரைக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சிவபெருமானின் ஆடல்தோற்றம் ஒன்றைப் பார்த்தபோது அதிலிருக்கும் அர்த்தரேசித அமைப்பைப் பற்றிச் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டுக் குடைவரைகளில் அவ்வளவாகக் காணப்படாத அரிய அமைப்பான அர்த்தரேசிதத்தைக் கொண்டுள்ள மற்ற குடைவரைகளைப் பார்க்காமல் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது என்ற முடிவுக்கு வந்தோம். அதேகருத்து இந்நூல்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலாசிரியர்கள் படைக்கும் நூல்களின் முழுமைத்தன்மை குறித்துத் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. ஒருமுறை வாசித்துப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். ஒவ்வொரு குடைவரையையும் கட்டடக்கலை அமைப்பு, சிற்பங்கள், கல்வெட்டு கூறும் செய்திகள் என்ற அமைப்பில் அனைத்துத் தரவுகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் தரும் செய்திகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, வடபரங்குன்றத்தில் கிடைத்திருக்கும் முப்பத்து நான்கு கல்வெட்டுகள் தரும் செய்திகள் கீழ்க்கண்ட பிரிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

1. வளநாடு - நாடு - ஊர்கள்
2. நிருவாக அமைப்புகள்
3. வரிகள்
4. வேளாண்மை, நீர்ப்பாசனம்,
5. நிலவிற்பனை
6. நிலக்கொடைகள்
7. மடங்களும் மடப்புறங்களும்
8. விளக்கு, வழிபாடு, படையல்
9. மனைகள்
10. சிறப்புச் செய்திகள்
11. இரத்தக் காணிக்கை
12. கோயில்கள்
13. ஊராக்கம்
14. கோயில் நிருவாகம்
15. பரங்குன்றத்தின் வரலாறும் குடைவரைகளின் காலமும்

இந்த முப்பத்து நான்கு கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட அனைத்துமே நிவந்தங்கள் பற்றியவைதான். அவற்றிலிருந்துதான் மேற்கண்ட நிவந்தம் சாராத தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. எனவே, கோயிற்கல்வெட்டுகளில் நிவந்தங்கள், கொடைகள் தவிர வேறெதுவும் இல்லை; வரலாற்றை அறிய அவ்வளவாக உதவாதவை என்ற கருத்துடைய அறிவிலிகள் ஒருமுறை இந்நூல்களைப் படிப்பது அவர்தம் பித்தத்தைத் தெளியவைத்து உண்மை நிலையை உணர்த்தும்.

இந்நூல்களால் புதிய கலைச்சொல் ஒன்றும் நமக்குக் கிடைத்திருக்கிறது. குடைவரை என்ற சொல்லுக்கு, மலையில் குடையப்பட்ட கோயில் என்ற பொதுவான பொருள் ஒன்று இருந்தாலும், மலை, குன்று மற்றும் பாறைகளில் குடையப்படும் கோயில்கள் என்றே பொருள்படும். இக்கோயில்கள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மண்டபங்களையும் கருவறைகளையும் கொண்டிருக்கும். வடபரங்குன்றம், திருக்கோளக்குடி போன்ற இடங்களில் மண்டபங்கள் இல்லாமலும் கருவறைகள் மட்டும் இருக்கின்றன. இவற்றை எத்தகு கலைச்சொல்லால் சுட்டுவது என்பதில் சிக்கல் உள்ளது. கட்டுமானக் கோயில்களில் உள்ள சுவர்க்கோட்டங்களைத் திருமுன் என்றழைக்கும்போது, இத்தகைய குடையப்பட்ட திருமுன்களைக் குடைவுத்திருமுன் என்ற சொல்லால் குறிக்கலாம் என்றெண்ணி, இச்சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நூல்களுக்காக ஆசிரியர்கள் மேற்கொண்ட பயணங்களை முன்னுரையிலேயே காணலாம். குன்றக்குடி, திருக்கோளக்குடி மற்றும் வடபரங்குன்றம் ஆய்வுகளின்போது தலா ஒரு பயணத்தில் நாங்களும் கலந்துகொண்டோம். அவற்றை வரலாறு.காம் இதழ்களில் அவ்வப்போது வெளியிட்டு இருக்கிறோம். திருவலஞ்சுழி ஆய்வுப் பயணங்கள் அளவுக்கு அடிக்கடி கலந்து கொள்ள இயலாவிட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை ஓரளவுக்குச் சரியாகப் பயன்படுத்தி முடிந்த அளவு கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கிறது. அதுபோலவே, பயண அனுபவங்களும் மறக்க முடியாதவை. திருப்பரங்குன்றம் குடைவரைக்குக் கீழே உள்ள இருளடைந்த சேட்டைத்தேவித் திருமுன் உள்ளே நுழைவதற்கு முன் கோயில் அலுவலர்கள் மிகவும் பயமுறுத்திவிட்டார்கள். பின்னர் குடைவரைக் காவலர் திரு.கி.பாலமுருகன் அவர்களின் வழிகாட்டலில் கைவிளக்கின் உதவியுடன் உள்ளே சென்று தரிசித்து வந்தோம். வெளியே வந்தபிறகு, 'நிறையப் பாம்புகள் இருக்கின்றன என்று சொன்னீர்கள், ஆனால் ஒன்றைக்கூடப் பார்க்கவில்லையே' என்று இலாவண்யா கேட்டதற்கு, 'வெளியே வரும்போது உங்கள் காலருகே இரண்டு ஊர்ந்து சென்றன. சொன்னால் அதிர்ச்சியில் மிதித்திருப்பீர்கள் என்பதால் சொல்லவில்லை' என்று பாலமுருகன் சொன்னதைக் கேட்டதும் ஒரு கணம் திகைத்துப்போனோம்.

ஒவ்வொரு நூலை உருவாக்கும் முன்னும் இந்நூலாசிரியர்கள் எதற்காக இத்தனை பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்று ஆரம்ப நாட்களில் யோசித்திருக்கிறோம். பிறகு படிப்படியாகப் புரிந்து கொண்டோம். கடந்த பாண்டியர் குடைவரைப் பயணங்களின்போது இதன் பயனைக் கண்கூடாகக் கண்டோம். சில குடைவரைகளைச் சில நூலாசிரியர்கள் ஒருமுறைகூட நேரில் பார்க்காமலேயே அவற்றைப் பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு அறிஞர் எழுதிய ஒரு புத்தகத்தை அப்படியே தழுவி வேறொருவர் பெயரில் எழுதும்போது, முதல் நூலில் உள்ள பிழைகள் இரண்டாம் நூலிலும் அப்படியே தொடர்ந்திருப்பது மட்டுமின்றி, அதற்கு ஒருபடி மேலேபோய், முதல் நூலிலும் குடைவரையிலும் இல்லாத தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. எழுதப்படும் குடைவரையை ஒரேயொரு முறையாவது நேரில் பார்த்திருந்தாலும் வெளிப்படையாகத் தெரியும் சில பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். 'இப்படிக்கூட வரலாற்றாய்வு நூல்களை எழுதுவார்களா?' என்று அதிர்ச்சியுற்றோம். சில ஆய்வாளர்களின் நூல்களில் தவறான தகவல்கள் எப்படி இடம்பெறுகின்றன என்று புரிந்தது. பிற்காலத்தில் நாங்கள் நூல் ஒன்றை எழுதும்போது இத்தகைய தவறுகள் நேரக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டோம்.

Saturday, September 6, 2008

படிக்கலாம்

VB0002329



பதிப்பு : முதற் பதிப்பு (2007)
விலை : 130.00 In Rs
பக்கங்கள் : 258
ISBN :
பிரிவு : தொல்லியல் ஆய்வு
எழுத்தாளர் : இராசு.செ


பதிப்பகம் : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
முகவரி : தமிழ் வளர்ச்சி வளாகம்

ஆல்சு சாலை, எழும்பூர்

சென்னை - 60008

இந்தியா
இணைய தளம் :

சமணப்படுக்கைகள் விழுப்புரத்தில் கண்ண்டுபிடிப்பு




CHENNAI: Over the last three months, two rock art sites, two caverns with Jaina beds, and dolmens have been discovered within a radius of 25 km on the hillocks behind the Gingee fort in Tamil Nadu’s Villupuram district.

Members of the team that found the sites, said the discovery of Jaina beds confirmed the earlier view that present-day Villupuram district was once a prominent centre of Jainism. The presence of the rock art sites and dolmens showed that the area had been under continuous human occupation for 3,000 years, they added.

On June 1, K.T. Gandhirajan, an explorer who specialises in art history, T. Ramesh, a researcher in archaeology, and others found a big cavern with Jaina beds and rock art on a hillock called Pancha Pandavar Kal, near Vadagal village in Gingee taluk.

The hillock, located 15 km behind the Gingee fort, forms part of a chain of hills in the area. The team found a series of Jaina beds on the floor of the cavern and pre-historic paintings on the boulder surface opposite the beds.

“The beds are of primitive nature. They are not evolved. They are about 2,000 years old,” said Mr. Gandhirajan.

Raised “pillows” had been hewn out of the rock-floor at one end of the beds. Channels were cut to drain out rainwater from the beds or the floor was scooped out to collect rainwater.

The rock art consists of a painting of a deer done in white kaolin with outlines in red ochre. “This is really rare,” Mr. Gandhirajan said. While this figure of a deer is about 3 feet by 3 feet in size, there are tiny drawings of deer and lizard (udu mbu in Tamil) on the adjacent rock surface, as if to contra-distinguish their size. He estimated that the paintings might belong to circa 1000 B.C.

“These paintings were done by pre-historic men — by hunter-gatherers who used to live in this cavern. Much later, the Jain monks occupied them,” Mr. Gandhirajan said.

Three months earlier, the team found about a dozen port-holed dolmens on a hill near Devadanampettai, on the way to Tirukovilur, about 15 km from the Gingee fort. While most of the dolmens were found disturbed, a few were intact. About 2 km away, the team discovered a small rock art site, with drawings in white kaolin of marching men or men with raised hands.

About 25 days ago, Mr. Ramesh and Mr. Gandhirajan found 11 Jaina beds on a hill near Kanchiyur village, 28 km from Gingee.

Other sites

According to T. Arun Raj, Deputy Superintending Archaeologist, Archaeological Survey of India, Chennai Circle, Jaina beds had been discovered recently at Thirunarungkondai near Ulundurpet, Paraiyanpattu and Melkudalur. There are remains of the structural Jaina temples at Tirunarungkondai, Melsithamur and Thondur near Tindivanam and Melmalayanur near Tiruvannamalai. All these places are in Villupuram district.

On the hill at Sirukadambur, there is a bas-relief of 24 Jaina tirthankaras. “Adjacent to this, we have an inscription about a Jaina monk who went on a fast-unto-death. This inscription belongs to the transitional period from Tamil-Brahmi to Vattezuthu,” he said.

There are rock art sites in the district at Sethavarai and Kizhvalavu. “In addition to these relics of Jainism, we have now discovered these Jaina beds in two places. All this show that the present-day Villupuram district was a prominent centre of Jainism,” Mr. Arun Raj said.

மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு
http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram_caves.asp

Continuity of tradition: Megalithic pots with arrow-work graffiti found at Sembiankandiyur village in Nagapattinam district.
வரும்௨0.9.2008 இருபதாம் தேதி செப்டம்பர் சனிக்கிழமை 5 மணிக்கு வங்கி ஊழியர் சங்க கட்டிட்டத்தில்தொல்லியல் துறை அரிஞர் பூங்குன்றன் தமிழக வரலாறு குறித்து ஒளிப்படத்தோடு கூடிய உரை நிகழத்துகிறார்
வாருங்கள்

வங்கிஊழியர் சங்க கட்டிட்டம்
அங்கண்ணன் புலவு உணவகம்எதிரில்
வெரைட்டிஹால் ரோடு
கோவை
தொடர்ர்புக்கு ஜான்
9345944439

Thursday, September 4, 2008

பழங்குடிகள் அன்றும் இன்றும்-வி.பி.குணசேகரன்

வனங்களில்இயற்கையின்குழந்தைகளானபழங்குடிகள்தங்களின்சகோதரர்களாக, முன்னோர்களாக, தெய்;வங்களாக, மண்ணையும்,மரங்களையும், நீரையும், விலங்குகளையும் வழிபட்டனர்.

பழங்குடிகளின் வாழ்க்கைத் தேவைகளை வனங்களே நிறைவு செய்தன. அவர்களின் தேவைகளும் மிகக் குறைவு. எளிய வாழ்க்கை முறை, இயற்கையை சிதைக்காமல், இணைந்து வாழ்ந்தனர். சிதைப்பது குற்றம் எனக் கருதினர்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்புவனத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, காய்களை, கனிகளை, கிழங்குகளை உணவாகக் கொண்டனர். தேவைக்கு சிறு விலங்குகளை வேட்டையாடினர். வேட்டையின் போது சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாடமாட்டார்கள். இனப்பெருக்க காலத்தில் வேட்டைக்கு செல்வதை தவிர்த்தார்கள். வேட்டையை அந்த கிராமமே பகிர்ந்து கொள்வர். இது அவர்களின் சிறந்த பண்புக்கு எடுத்துக்காட்டு.

தங்களது உணவுத் தேவைக்கு அளவான இடத்தில் விவசாயம் செய்தனர். கலப்புப் பயிர் விவசாயம் செய்தனர்@ மண்ணின் வளத்திற்கு ஏற்ப இடம் பெயர்ந்து விவசாயம் செய்தனர். 10, 15 குடும்பங்களைக் கொண்ட ஒரு இனக்குழு ஒரு கிராமமாக இருந்தது. விவசாயத்திற்காக கிராமமே இடம் பெயர்வது, எளிமையானது. சிறிய வீடுகள், அதே சமயம் தட்பவெப்பநிலைக்கு ஏற்புடையது. தங்களுக்கென தனி மொழி, நீதி, நிர்வாகம், உறவு, எல்லைகளைக் கொண்ட வாழ்க்கை முறை. வனம், நிலம், தனி நபர்களின் உடைமையாக இல்லாமல் வளங்கள் அனைத்தும் சமூக உடமையாகக் கொண்டு வாழ்ந்தனர்.

ஆங்கிலேயர்களின் காலத்தில்வனங்களிலுள்ள கனிமங்களை எடுக்க மரங்களை வெட்டினர் ஆங்கிலேயர். வனங்களைச் சிதைத்துக் கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வனத்தைக் காக்கும் போராட்டத்தை பழங்குடிகள் நடத்தினர். பழங்குடிகளை ஒடுக்கி, வனத்தின் வளத்தை வசப்படுத்த, பழங்குடிகளின் பாரம்பரிய உரிமையை பறிக்கிற வனக் கொள்ளைகளை, சட்டங்களை ஆங்கிலேய அரசு, 1882லிருந்து கொண்டு வந்தது.

பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் என்று அரசு எல்லை நிர்ணயித்து, அந்த பகுதிக்குள் பழங்குடிமக்கள் செல்லவே தடை போட்;டது. வேட்டையாட, விவசாயம் செய்ய, கால்நடைகள் மேய்க்க, சிறு வனப்பொருட்களை பயன்படுத்த உரிமை மறுக்கப்பட்டது. மீறினால் அபராதம், சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

வனப் பாதுகாப்பிற்கென வனத்துறை அதிகாரிகள் தங்க, ஆங்கிலேய அதிகாரிகள் ஒய்வெடுக்க வசதியான இல்லங்கள் வனப்பகுதியில் கட்டப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களுக்குப் பொழுதுபோக்கு.

கிராமக்காடுகள் என ஒதுக்கப்பட்ட நிலங்களில் பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கென தனித்தனியாக சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையற்ற பழங்குடிகளின் உயர்ந்த பண்புகள் வசதி படைத்த பழங்குடி அல்லாதவர்களுக்கு வசதியானது. அதிகாரிகளின் துணையோடு பழங்குடி அல்லாதார் மலை நிலங்களுக்குப் பட்டா பெற்றனர்.

காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் பயிரிட பல்லாயிரம் ஏக்கர் மலை நிலங்கள் ஆங்கிலேயருக்கும், அவர்களுக்குத் துணை நின்ற பணம் படைத்தவர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டது. நிலத்தை இழந்த பழங்குடிகள் தேயிலைத் தோட்டக் கூலிகளாயினர்.

ரயில் பாதை போட, கப்பல் கட்ட, இங்கிலாந்தில் வீடு கட்ட ஓங்கி வளர்ந்த மரங்கள் வெட்டிஎடுத்துச் சென்றனர் சமவெளியினர். மின்சாரம், பாசனம் பெற ஆங்கிலேயர்கள் மலை ஆறுகளின் குறுக்கே பாபநாசம், முல்லை பெரியாறு அணை கட்டினர். அதனால் அங்கிருந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர்.

நிலம், வன உரிமை பறிக்கப்பட்ட பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஆங்கிலேய அரசு எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகுஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டங்களை சுதந்திர இந்தியாவில் மேலும் கடுமையாக்கி வனப்பாதுகாப்பு, வன விலங்;கு பாதுகாப்பு சட்டங்களை தமிழக அரசும், இந்திய அரசும் கொண்டு வந்தன.

வேட்டையாடும் உரிமை முற்றாக பறிக்கப்பட்டு வன வெளியேற்றம் தொடர்ந்தது. வன விலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றி;ற்கு எல்லை வகுக்கப்பட்டு அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். காகித ஆலைகளுக்கு வனத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. ஆலைகளின் தேவைகளுக்காக மரங்கள் வளர்க்க வனப்பகுதி ஒதுக்கப்பட்டது.

கனிமங்கள், கருப்புக்கல் போன்றவை எடுக்கவும் மரங்கள் வெட்டவும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தன மரக் கிடங்குகள் உருவாக்கப்பட்டு பல கோடி மதிப்பு மிக்க சந்தன மரங்கள் வனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

வனத்தில் விளைகின்ற நெல்லி, கடுக்காய், 10ச்சுக்காய், சீமார் புல் போன்ற சிறு வனப்பொருட்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. வன வளம் அரசிற்கு வருவாய் ஈட்டித் தரும் பகுதியாகவே மாற்றப்பட்டது.

பாசன அணை, மின்சார அணை, தேயிலைகாப்பி தோட்டங்கள், நிலக்கரி, எண்ணை, இரும்பு, கருங்கற்கள், தைல, ரப்பர் மரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், ஆலைகள், அரசு-தனியார் ஓய்வில்லங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அரசு மற்றும் தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்காக தொன்று தொட்டு வனங்களில் வாழ்ந்த பழங்குடிகளை வெளியேற்றியது அரசு. ஆனால் அவர்களுக்கு வழங்கிய மாற்று இடமோ பொட்டல் காடுகளாக இருந்தன. பழங்குடிகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தண்ணீரிலிருந்து மீனைப் பிடித்து தரையில் போட்டதைப் போல் அவர்களது வாழ்க்கைச் சூழல் முற்றாக சிதைந்தது. பல்லாயிரம் வருடங்கள் சேமிக்கப்பட்ட அவர்களது அறிவுத் தொகுப்பு, கலாச்சாரம், மனித குலத்துக்கு பயனின்றி போனது. வனம் அழிவிற்கு உள்ளானது.

வனமும், நிலமும், கால்நடைகளையும் இழந்து பரதேசிகளாகப் பழங்குடிகள் மாற்றப்பட்டனர். வனம் அன்னியமானது. வனத்துறையின் ஆதிக்கத்தின் தயவில்தான் வாழும்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

வீடு கட்ட மூங்கில் வெட்டினாலும், கலப்பைக்கு மரம் வெட்டினாலும், சமையலுக்கு காய்ந்த சுள்ளிகள் பொறுக்கினாலும் வனத்துறைக்கு கப்பம் கட்ட வேண்டும். கால்நடைகள் மேய்க்க வரி கட்ட வேண்டும். வனத்துறையின் எடுபிடிகளாக, பண்ணை அடிமை போல் பயந்து வாழும் நிலையே இன்று நிலவுகிறது.

கடுமையான சட்டங்கள், ஆயுதங்கள், தொலைநோக்கிகள், வாகனங்கள், கம்பியில்லா பேசி, அலுவலகங்கள், வனவர் முதல் தலைமை வனப் பாதுகாவலர் வரை பல்லாயிரம் பேர் பல கோடி மாத ஊதியம், இன்னபிற ஏற்பாடுகள் இருந்தும் வனத்தின் பரப்பு சுதந்திரத்தின் போது இருந்ததை விட மூன்று மடங்கு குறைந்து தமிழக மொத்தப்பரப்பில் 10மூத்திற்கும் கீழ் சென்றுவிட்டதற்கு என்ன காரணம்? தண்ணீர் உற்பத்தி செய்கின்ற மிகப் பெரிய தொழிற்சாலையான வனம், புயல் மழையை நம்பியே தண்ணீரைத் தருகிறது.

வனத்துறையின் தயவோடு, வெளிச்சத்திற்கு வராத வீரப்பன்கள் மரக்கடத்தலையும், வன விலங்கு வேட்டையையும் தொடர்கிறார்கள்.

அப்போது சந்தன கடத்தல் வீரப்பன் நடமாட்டம் ஈரோடு, தருமபுரி காடுகளோடு நின்றது. சேலம்-ஏற்காடு, கல்வராயன் மலை, நாமக்கல்-கொல்லிமலை, விழுப்புரம்-சேர்வராயன் மலை, வேலு}ர்-ஜவ்வாது, ஏலகிரி மலை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கோவை, நீலகிரி, பழனி, கொடைக்கானல், குமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணாமல் போன சந்தனம், தேக்கு, ஈட்டி மரங்களைக் கடத்தியவர்கள் யார்? பழங்குடிகளா? இதற்கு விடை கண்டால் மட்டுமே வனத்தைக் காக்க முடியும்.

எந்த இடத்தில் என்ன மரம் வளரும், எந்தப் பருவத்தில் விதைகள் முளைக்கும், விலங்குகளின் கணம், மரத்திருடர்களின் நடமாட்டம் பற்றி முழுமையாக அறிந்த பழங்குடிகளை புறக்கணித்து, அவர்களை வனத்திலிருந்து அன்னியாமாக்கியதே வனப்பரப்பு குறையக் காரணமாகியது. பழங்குடிகளை ஈடுபடுத்தா வன வளர்ப்புத் திட்டங்கள் வெற்றி பெறா.

வனம் காக்க பழங்குடிகள் காக்கப்பட வேண்டும்பழங்குடிகளுக்கான எளிய பாடத்திட்டம், வனம் சார்ந்த கல்;வி, ஆரம்ப பள்ளி வரை அவரவர் தாய்மொழியில் கல்வி, விடுதியில் அவர்களது உணவு, குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பள்ளி நேரம், விடுமுறை, நடுநிலைப் பள்ளி வரை தனித்த பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்.

நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்க வேண்டும். மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் போல் தமிழகத்திலும் நிலங்கள் கை மாறுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். வனத்தின் மீதான உரிமை, வனம் தங்களது என்ற உணர்வு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். வன வளர்ச்சி, பாதுகாப்புப் பணியில் பழங்குடிகளை நியமனம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் ராகி, கம்பு, பருப்பு, துணி வழங்க வேண்டும். சரிவிகித உணவு இன்றி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை, பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படி இவர்களை காக்கத் தவறினால் வனம் அழியும். து} காற்றுக்கும், மழைக்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு மேலும், மேலும் அதிகரிக்கும்.

பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களை ஆராய, காத்திட, பழங்குடிப் பல்கலைக்கழகம் அவசியம்.

உலகமயச் சூழலில் மலை நிலங்கள் வீட்டுமனைகளாக, சுற்றுலா தலங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை சுற்றுலாவிற்கும் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குடிக்கும் பணப்பயிர் விவசாயம், ஆழ்குழாய் கிணறுகள், புதிய வேளாண்முறைகள் போன்றவை, ஓடைகளை வற்ற வைத்துவிட்டன. வன விலங்குகள் கோடையில் தண்ணீருக்கு அலைகின்றன.

பழங்குடிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை சிதைந்து நுகர்வு கலாச்சாரத்தால் சாலையோரம் நின்று வாகனங்களில் வருவோரை பிச்சை கேட்கும் குரங்குகள் போல் மாற்றப்படும் பழங்குடிகளைப் பாதுகாப்பு மிக மிக அவசியம்.

இவர்களுக்கென அமைப்பு, இவர்களுக்கான அமைப்பு அவசியம்.

Tuesday, September 2, 2008

Keetru Ungal Noolagam Article

இந்தியாவின் வரலாறு - தமிழக வரலாறு
(பேரா.சிவத்தம்பியின் ஆய்வுப் பயணம் )
- வீ.அரசு

பேராசிரியர் கா. சிவத்தம்பி பவளவிழா கொண்டாட்டம் என்பது அவர் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பிற்கு நன்றி பாராட்டும் விழா. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்குஎன்பதைப் போல அவருக்கு நன்றி பாராட்டுவதாக நாம் சொல்லிக்கொண்டாலும் நமது மொழி, இலக்கியம், சமூகம் தொடர்பான நமக்குள் நாம் பேசிக்கொள்ளும் விழாவாகவும் இதனை நாம் கட்டமைத்துக்கொள்கிறோம். கடல் கடந்து, திணை கடந்து, புதுத்திணையில் வாழும்போது இப்படியான விழாக்களின் முக்கியத்துவம் கூடிவிடுவதாகவே கருதவேண்டும்.

பேரா. சிவத்தம்பி கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பை, நாம் புரிந்துகொள்ளப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, கட்டமைப்பு தொடர்பான அவரது பங்களிப்புகள்தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், பாசுரங்கள், சாத்திரங்கள் வழி சமயங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முறைமைகள்.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தை விளக்கிக்கொள்வதற்கு அவர் புலப்படுத்திய நெறிமுறைகள்.

கடந்த மூவாயிரம் ஆண்டு காலத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கு நெறிகளை, அச்சமூகத்தின் ஊடாக வெளிப்பட்ட பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேராசிரியர் செயல்பட்ட போக்கைப் புரிந்துகொள்ளவே மேற்கண்ட பாகுபாடு. இதில் முதல் நிலையில் கூறப்பட்ட பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த பேராசிரியரின் ஆய்வுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்வதற்கு இவ்வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வேறு இருநிலைப்பட்ட போக்குகள் தொடர்பாக வேறு சந்தர்ப்பங்களில் பேசிக்கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய பேச்சு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான புதிய சூழலை அடிப்படையாகக் கொண்டு நிகழத் தொடங்கியது. காலனியம், இந்தியா, இலங்கை போன்ற நிலப்பகுதிகளைநாடாகக் கட்டமைத்தபோது, அந்நிலப்பகுதிகளில் வாழ்ந்த/வாழும் மக்கள் கூட்டத்தின் மொழி தொடர்பான உரையாடல்கள் தொடங்கின. ஐரோப்பிய நாடுகளில் 14 ஆம் நூற்றாண்டு முதல் உருவான, தொழிற்புரட்சி அது சார்ந்த சமூக மாற்றங்கள், மறுமலர்ச்சிகள், உலகப் போர்கள் ஆகிய அனைத்தும் அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தினையே அவர்களது அடையாளங்கள் அல்லது இருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அவர்களது மொழி தொடர்பான உரையாடல்களுக்குச் சென்றனர்.

இதனைப் புரிந்துகொள்ளுவதற்கு, உலகத்தின் / சூரியன் மறையாத பிரதேசமாகக் கட்டமைக்கப்பட்ட விக்டோரியா மகாராணியாரின் இலண்டன் மாநகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான பல்வேறு ஆய்வு அமைப்புகளே சாட்சியங்களாக அமைகின்றன. (Aboriginess Protecton Society-1987, The Ethnological Society of London-1843, The Anthropological Society London-1863, The Royal Anthropological Institute-1871) இவ்வகையான அமைப்புகள், உருவாக்கத்தின் மூலம் உலகத்தின் பழம் நாகரிகங்கள் மற்றும் மொழிகள் கண்டறியப்படுகின்றன. அவை குறித்துப் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் கட்டப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் மூலம் கட்டமைக்கப்படும் சமூக வரலாறு தொடர்பானஅரசியல்பல் பரிமாணங்கள் கொண்டவை.

இந்தப் பின்புலத்தில், ஆசிய நாடுகளில்/இந்தியா/ இலங்கை நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் மொழி பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வுரையாடலில் ஒற்றைப் பரிமாணமாக இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம் கட்டமைக்கப்படுகின்றது. அதில் பெரும்பங்கை மாக்ஸ்முல்லர் வகிக்கிறார். ஆசிய நாடுகளுக்கு ஒருமுறைகூட பயணம் செய்யாது லண்டனின் இருந்து செயல்பட்ட அவர், இந்தியா/இலங்கை நிலப்பகுதிகளைப் புனித தேயமாகக் கட்டமைத்து, அப்பகுதிகளில் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் சார்ந்த மொழியே இருப்பதாகக் கட்டமைக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல்மொழிப் பேராசிரியராக அவர் நியமிக்கப்படுகிறார். 1868இல், ஒப்புமொழி நூல் (Comparative Philogy) பேராசிரியர் பதவி வழங்கப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் இந்திய/இலங்கை நிலப் பகுதிகளில் இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சாராத திராவிட மொழிக் குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்கிறது. இந்தோ ஆரிய மொழியான சமசுகிருதம் மட்டும் இந்திய/நிலப்பகுதியின் மொழி என்பது எல்லீஸ் மற்றும் கால்டுவெல் ஆய்வுகளாலும் பின்னர் எமனோவின் ஆய்வுகளாலும் மறுதலிக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் நமது பழம் பிரதிகள் அச்சுக்கு வரும்போது, மூன்றாம் முறையாகப் பழம் தமிழ்ப் பிரதிகள் அறியப்படுகின்றன. இந்நிகழ்வால், தமிழ்ச் சமூகம் குறித்த வரலாறு எழுதுநெறிகள் புதிய பரிமாணத்தில் செயல்படத் தொடங்கின. பிரதிகள் கண்டுபிடிப்புகள் மட்டுமின்றித் தொல்பொருள் ஆய்வுகளும் உடன் நிகழ்கின்றன. 1784இல் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறை பிரித்தானியர்களால் உருவாக்கப்படுகின்றது. 1863 இராபர் புரூஸ் புட் என்பவர்சென்னைக் கோடரிஎன்று அழைக்கப்படும் மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளைச் செங்கற்பட்டு அருகில் கண்டெடுக்கிறார்.

1838இல் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் கல்கத்தா அருங்காட்சியத்தில் உள்ள அசோகன் காசுகளில் ஒரு பக்கம் இலத்தீன் மொழி எழுத்துக்களும் இன்னொரு புறம் வேறு மொழி எழுத்துக்களும் இருப்பதைக் கண்டறிந்து, இலத்தீன் மொழியை வாசிப்பதின் மூலம் இன்னொரு பக்கம் இருந்த பிராமி எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இந்திய நிலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவமுறை ஒன்று கண்டறியப்பட்டது. இதனைக் காசுவியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் கன்னிகாம், 1902ஆம் ஆண்டில் காசுகளில் இவ்வகையான எழுத்து வடிவங்களைக் கண்டறிந்தார். இவ்வடிவங்கள் பற்றிய ஆய்வானது தமிழ்ச்சூழலில் 1930களில் தி. நா. சுப்பிரமணிய அய்யரால் மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 1890 இல் உல்ஸ் (Woltze) மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தருணத்தில்தான் சங்க இலக்கியப் பிரதிகள் அச்சு வாகனம் ஏறின. 1851-1940 என்ற கால இடைவெளியில் பல பரிமாணங்கள் சார்ந்து தமிழின் பழம் பிரதிகள் பதிவு செய்யப்பட்டன. அப்பிரதிகளையும் காசுகளையும் (1901இல் நிகழ்த்தப்பட்ட ஆதிச்ச நல்லூர் மற்றும் 1942இல் அரிக்கமேடு ஆய்வுகள் மற்றும் 1924 சிந்து சமவெளி அகழ்வாய்வுகள்) அடிப்படையாகக் கொண்டும் புதிதாகக் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் கொண்டும் வரலாறு எழுதுநெறி புதிய முறையில் உருப்பெற்றது. இவ்விதம் உருவான வரலாறு எழுது நெறியில், ஈராஸ் பாதிரியார் தி.பி. சீனிவாச அய்யங்கார், வி. சி. இராமசந்திர தீட்சதர் ஆகிய பிறர் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை நிகழ்த்தினர். இவர்களது ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், கா. சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய பிறர் பிற்காலங்களில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதத் தொடங்கினார். இன்னொரு புறம் கனகசபைப் பிள்ளை ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்என்ற ஆய்வு நூலைக் கொண்டுவந்தார். பின்னர் சிவராஜப்பிள்ளை ‘The Chronology of Early Tamils’ என்ற ஆய்வு நூலை எழுதினார்.

இவ்வாய்வு மரபுகளைப் பற்றிய விமரிசனம் என்பது இவை இலக்கியப் பிரதிகள் சார்ந்தவை, அகச் சான்றுகள் இல்லாதவை என்று பல நிலையில் பேசப்பட்டன. ஆனால் 1940களில் இரண்டாம் உலகப்போர் சார்ந்து உருவான மானிடவியல் ஆய்வுகளும் அது சார்ந்த மொழியியல் ஆய்வுகளும் உலகம் முழுவதும் மொழி ஒப்பாய்வு எனும் ஆய்வுத் தளத்திலிருந்து மொழியை மொழியியல் என்னும் மொழி சார்ந்த தர்க்கப்பூர்வமான ஆய்வுக்கு எடுத்துச் சென்றது. இச்சூழல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல விளைவுகள் உருப்பெற வாய்ப்பாக அமைந்தது. பேராசிரியர் எமனோ, பர்ரோ, கமில்சுவலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர்கள் சங்க இலக்கியப் பிரதிகள், தமிழகத் தொல் பழங்குடிகள், தமிழ்மொழி ஆகியவை தொடர்பானவரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) மற்றும் மானிடவியல் சார்ந்த ஆய்வுப் புலங்களுக்கு வழிகண்டனர். (இவர்களால் உருவாக்கப்பட்ட IATR அமைப்பு Tamil Culture என்ற இதழும் அதில் முக்கியமான பங்களிப்பை செய்ய தொடங்கியது)

தமிழகத்தில் பேரா.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ ஆகிய பிறர் மொழி இலக்கிய ஆய்வுகள், இத்தருணத்தில் சங்க இலக்கியப் பிரதிகளை வேறு கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கியது. பேரா. தனிநாயகம் அடிகள் அணுகுமுறை மற்றும் அவரது மாணவரான சிங்காரவேலு அவர்களின் மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம் குறித்த அணுகுமுறை ஆகியவை, தமிழ்ச் சமூக வரலாற்றை, சங்க இலக்கியப் பிரதிகளைக்கொண்டு வேறு பரிமாணத்தில் கட்டமைக்க வழிகண்டது.

மேல் விவரித்தப் பின்புலத்திலிருந்து முற்றிலும் புதிதான பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்து வரலாற்று ஆய்வை பேராசிரியர் கா. சிவத்தம்பி 1960-களில் தமது கலாநிதி பட்டத்தின் மூலம் மேற்கொண்டார். இவ்வாய்வு இதற்கு முன் தமிழ்ச் சமூகம் குறித்த வரலாற்று ஆய்வுகளை அடியொற்றியதாக அமையாது நவீன வரலாற்று வரைவியல் சார்ந்து அமைந்ததாகக் கருத முடிகிறது. அதனைப் பின்வருமாறு விவாதிக்க முடியும். அரச பரம்பரைகளின் அரசியல் தொடர்பான தகவல் எழுதுதல் எனும் வரலாறு எழுதுநெறி என்பதற்கு மாற்றாக, புவியியல் (Geopolitics) சார்ந்த அரசியல் வரலாறு எழுது முறையை அவர் நமக்குத் தருகிறார்.

நிலம் அதில் வாழும் மக்கள், அத்தன்மை சார்ந்து உருப்பெறும் பண்புகள், அதனைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் கட்டமைத்த முறை, இதிலிருந்த வரலாறு எழுது முறைமை நாம் எவ்விதம் கட்டமைப்பது என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் ஆய்வுகள் அமைகின்றன. இதனைச் சுருக்கமாகதிணை மரபுசார்ந்த ஆய்வு என்று சொல்லமுடியும். இதனைப் புரிந்துகொள்ள அவரது கலாநிதி பட்ட ஆய்வின் ஒரு பகுதியை இங்கு மேற்கோளாகக் கொண்டு விவாதிக்க முடியும்.

பெரும்பாண் :46-62 வரிகளை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பகுதி :

பள்ளத்தாக்கு, நீர்ப்பாசனப் பகுதிகள், மீன்பிடிப்பு பகுதிகள், கடற்கரைப் பட்டினங்கள் ஆகியவை குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்கிறார். இதன் மூலம், குலக்குழுக்களின் வாழ்முறை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அது பின்வரும் வகையில் அமைகிறது. “திணைக்கோட்பாடுஎன்பது தமிழரிடையே காணப்பட்ட அகவுறவுகளினதும் அசத்துவ சமூக அரசியல் ஒழுங்கமைப்பினதும் புதை வடிவம் ஆன செய்யுள் மரபு” (2005) இத்தன்மையை ஆற்றுப்படை நூல்களின் மூலம் விரிவாக ஆய்வு செய்கிறார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் எழுதியதிணைக் கோட்பாடுஎன்ற கட்டுரை, இந்திய வரலாற்று ஆய்வாளர்களான ரொமீலா தாப்பார் ஆகிய பிறருக்குப் பண்டைத் தமிழ்ச் சமூக இயங்குமுறை குறித்தப் புதிய ஒளியைப் பெறுவதற்கு உதவியாகக் கூறுகிறார்கள். இப்பின்புலத்தில் பேராசிரியர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளானஅரசமைப்பு உருவாக்கம்’, ‘உயர்குடி மேட்டிமை வளர்ச்சி’, ‘முல்லைத் திணை ஒழுக்கம்ஆகிய ஆய்வுகள் முக்கியமானவை. கலாநிதி பட்ட ஆய்வில் பாண், பொருநர், புலவர், கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலியர் ஆகியோர் குறித்த ஆய்வுகளும் வெறியாட்டு, தை நீராடல், வாடா வள்ளி ஆகிய சடங்குகள் தொடர்பான ஆய்வுகளும் இந்திரவிழா, பங்குனி விழா, ஓண விழா, உள்ளி விழா, சுடர் விழா, நீர் விழா, பூந்தொடை விழா ஆகிய விழாக்கள் தொடர்பான ஆய்வுகளும் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் மற்றும் குறத்தியர், வேட்டுவர், ஆயர் தொடர்பான ஆய்வுகளும் தமிழ்ச் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் ஆய்வுகளாக அமைகின்றன. துணங்கைக் கூத்து, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, சாக்கைக்கூத்து ஆகியவைத் தொடர்பான ஆய்வுகள், பண்டைத் தமிழ்ச் சமூக அரங்க வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

சடங்கு, விழா, கூத்து சார்ந்து வெளிப்படும் நமது அகத்திணை மரபு சார்ந்து பேராசிரியர் செய்துள்ள பதிவு முக்கியமானது. “திணை உருவாக்கத்தின் புவி இயல் அடிப்படைகளும் அப்புவிஇயல் அடிப்படையின் சமூக நிர்ணயிப்புகளும் ஆண் - பெண் உறவை பாதிக்கின்ற முறைமையை நாம் அகத்திணை மரபுஎன்கிறோம் (2005) என்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் பிற்கால சமூக அமைப்பு குறித்துப் பேட்டன் ஸ்ரைன், நொபுறு கரோஷியா, சுப்பராயலு ஆகிய பலர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், சங்க காலம் எனக் கருதப்படும் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை சமசீரற்ற சமூக அமைப்பு என்று கண்டறிந்து அதன் பல்பரிமாணங்களையும் தமது தொடக்கக் கால ஆய்வாக (1960-80) பேராசிரியர் நிகழ்த்தி இருக்கிறார். இவை இவ்வளவு காலம் ஆங்கில மொழியில் தான் இருந்தது. இப்போதுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு உருவாக்கம் குறித்து:

நெகிழ்ச்சியான குடிமுறையிலிருந்து விடுபட்டு வளர்ச்சியடைந்த ஆற்றுப்படுகைகளில் அமைந்த நிலவுடைமை வேளாண்மை மற்றும் இதற்கென உருவான தலைவன் அரசனாக வடிவமைக்கப்பட்ட தன்மையைப் புலவர்களின் பாடல்கள் பேசுகின்றன.” என்கிறார்.

உயர்குடி மேட்டிமை வளர்ச்சி குறித்து:

சமயங்கள், சாதிகள் இவற்றை நிலைநிறுத்தும் அமைப்புகளான மடங்கள் போன்றவை மூலம், மேட்டிமை வளர்ச்சி உருப்பெறுகின்றன.” பேராசிரியரின் இவ்வகையான வரலாற்று ஆய்வுகள் எப்பின்புலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்து விவாதிப்பது அவசியம். மாக்ஸ்முல்லர், ஜான் ஸ்டீவென்சன், மோனியர் வில்லியம்ஸ், எச்.எச். வில்சன் ஆகிய பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி’ (Royal Asiatic Society) மூலம் இந்திய வரலாற்றை எழுதினார். இவர்கள் 1846இல் மொழிபெயர்க்கப்பட்ட ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வரலாற்றைக் கட்டமைத்தனர்.

அதுவே உலகம் முழுவதும் அறியப்பட்ட வரலாறாக இருந்தது. இதற்கு முற்றும் மாறாக, சங்க இலக்கியம், சிந்துவெளி, தொல் பொருள் ஆய்வுகள் வழியாகக் கட்டப்பட்ட பிறிதொரு வரலாற்றின் தர்க்கப் பூர்வமான கட்டமைப்பை பேராசிரியர் ஆய்வுகள் முன்னெடுக்கின்றன. அரசப் பரம்பரை ஆய்வுகளின் போதாமை, அதன் தர்க்கப் பூர்வ ஏற்பு முறைமை ஆகியவை ரிக்வேதம் தொடர்பான ஆய்வுகளோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சமூக ஆய்வுகளின் தர்க்கப் போதாமை இருந்தது. இத்தன்மை பேராசிரியர் ஆய்வுகள் மூலம் நிறைவு செய்யப்படுவதைக் காண்கிறோம். வடமொழி எனப்படும் சமசுகிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளின் பின்புலத்தில் உருவான வேதங்கள்/ ரிக்வேதம், பிராமணங்கள், உபநிடதங்கள், வியாகரணங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகிய மரபின் ஒப்பீடு சார்ந்து ஐரோப்பியர்கள் கட்டமைத்த ஆய்வுகள் இந்தியச் சமூக வரலாறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சூழலில், தென்னிந்திய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை, மேற்கூறப்பட்ட முறைகளுக்கு மாற்றான வேறொரு சமூக அமைப்பைக் காட்டுகின்றன என்ற ஆய்வை மார்க்சிய வரலாறு எழுதுமுறை சார்ந்து உருவாக்கியதில் பேராசிரியருக்குத் தனித்த இடமுண்டு.

இந்திய வரலாறு எழுதியலில் ராகுல் சாங்கிருத்தியாயன், கோசாம்பி பின்னர் ரொமீலா, ஹபீப் எனும் ஆய்வாளர்கள் / வடஇந்தியச் சமூகம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டார்கள். இவர்களது ஆய்வுகள் மார்க்சிய வரலாற்று நெறிமுறை சார்ந்த ஆய்வுகள். குறிப்பாக ராகுல்ஜியின் ரிக்வேதம் சார்ந்த ஆய்வுகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இந்திய இனக்குழுக்கள் தொடர்பான கோசாம்பி ஆய்வுகளும் அவ்வகையில் முக்கியமானவை. இந்தப் பின்புலத்தில் தென்னிந்திய சமூகம் பற்றிய . சுப்பிரமணியம், நீலகண்ட சாஸ்திரி ஆகிய பிறர் ஆய்வுகள், மானிடவியல், புவிஇயல் மரபு சார்ந்தவையாக அமையவில்லை. பேராசிரியர் ஆய்வுகளே அவ்வகையில் அமைந்துள்ளன. இதனை வரலாற்று அறிஞர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். இவ்வகையில், காலனியம் கண்டெடுத்த இந்திய நிலப்பரப்பின் இருமொழி, இரு பண்பாடு என்பதன் அடிப்படையாக இன்னொரு வரலாறு பேராசிரியரால் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டிருகின்றது. இது இவருடைய மிக முக்கியப் பங்களிப்பு எனக் கூறமுடியும்.

மேலும் ஆய்வுகள் என்பவை நிகழ்த்தப்பட்ட காலத்திலிருந்து, சம காலத்திற்கு வரும்போது, அவை புதிய ஆதாரங்களால் வலுவிழந்து போகும் வாய்ப்பு மிகுதி. பேராசிரியரின் ஆய்வுகள் அவ்விதம் நிகழவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐராவதம் மகாதேவனின் பிராமி எழுத்துத் தொடர்பான ஆய்வுகளும் இவரது ஆய்வுகளும் சந்திக்கும் புள்ளிகளில் முரண் பாடுகளைக் காணமுடியவில்லை.